பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூர் ...மாணிக்கவாசகர் சிவபெருமான் மீதுள்ள பக்தியினால் குதிரைவாங்கிவர மன்னன் தந்த பணத்தை இறைவழிபாட்டிற்கே செலவழித்தார் ..இதை அறிந்த மன்னன் எங்கே பரிகள் (குதிரைகள்) எனக்கேட்க இறைவன் நரிகளை பரிகளாக்கி பாண்டிய மன்னன் முன் அனுப்பி பின் அவைகளை நரிகளாக்கி காட்டிற்கு ஓடச்செய்து பக்தரான மாணிக்கவாசகர் புகழை உலகறியச்செய்தார் திருவாதவூர் சென்று இறைவனை தொழுவோம்.