Skip to main content

Posts

Showing posts from 2017

Baktha meera பக்த மீரா

கிருஷ்ண பக்தையான மீராவின் பாடல் ஒன்று ... நித்தம் நீராடி அவனைக் காணலாம் எனில் விரைவில் நான் நீரினமாவேன் கிழங்கும் கனியும் உண்டால் கிடைப்பானெனில் மகிழ்ந்து நான் வெள்ளாடாக விரும்புவேன் ...மணி உருட்டி செபித்துக் காணலாமெனில் பெரும் பெரும் மணிகளை உருட்டி வேண்டுவேன் கற்சிலை முன் வணங்கிக் காண்போமெனில் .. கற்பாறை மலையை உகந்து வணங்குவேன் ஆவின் பாலருந்தி அவனைக் காணலாமெனில் ...சிசுவும் கன்றும் அவனைக் காண்பாரே .. கொண்டவளைத்  தள்ளி விண்ணவனை நாடலாமெனில் ஆயிரமாயிரம் மக்கள் அலியாகாரோ? திண்ணமாகச் சொல்வாள் பக்தமீரா  அன்பின்றி வாரான் நந்தலாலா.

Thiruvaathavoor

பாண்டிய மன்னனின்  அமைச்சராக இருந்த  மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூர் ...மாணிக்கவாசகர் சிவபெருமான் மீதுள்ள பக்தியினால் குதிரைவாங்கிவர மன்னன் தந்த பணத்தை இறைவழிபாட்டிற்கே செலவழித்தார் ..இதை அறிந்த மன்னன் எங்கே பரிகள் (குதிரைகள்) எனக்கேட்க  இறைவன் நரிகளை பரிகளாக்கி  பாண்டிய மன்னன் முன் அனுப்பி பின் அவைகளை நரிகளாக்கி காட்டிற்கு ஓடச்செய்து பக்தரான மாணிக்கவாசகர் புகழை உலகறியச்செய்தார்  திருவாதவூர் சென்று இறைவனை தொழுவோம்.