ஒருவர் ஜாதகத்தில் புதன் நீசம், கிரகசேர்க்கை களால் பாதிப்பு, திதி சூன்யத்தால் பாதிப்பு, அஸ்தமனம் அடைவதால் ஏற்படும் பாதிப்புகள் ஜாதகரின் புத்திசாலித்தனத்தை கேள்விக்குறி ஆக்கும்.. ஜாதகத்தில் புதனின் ஆதிபத்தியம் பெற்ற இடஙகள் வலிமை இழந்து அவற்றின் பலன்கள் கிடைக்கப்பெறாது ஜாதகர் அவதியுருவார்.. இதற்கு ஶ்ரீரங்கம் சென்று ஶ்ரீரங்கநாதரை வழிபடுவதும்... ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்து மனமுருகி குறைகள் நீங்க பிரார்த்தனை செய்வதும் புதன் கிரக பாதிப்பை குறைக்க வழி செய்யும்.. பாசிபயறு சுண்டல் (அ )பாசிப்பயறு இனிப்பு வகைகளை தானம் செய்யலாம்.