Skip to main content

Posts

Showing posts from October, 2016

புதன் பரிகாரம்

ஒருவர் ஜாதகத்தில் புதன் நீசம், கிரகசேர்க்கை களால் பாதிப்பு,   திதி சூன்யத்தால் பாதிப்பு, அஸ்தமனம் அடைவதால் ஏற்படும் பாதிப்புகள் ஜாதகரின் புத்திசாலித்தனத்தை கேள்விக்குறி ஆக்கும்.. ஜாதகத்தில் புதனின் ஆதிபத்தியம் பெற்ற இடஙகள் வலிமை இழந்து அவற்றின் பலன்கள் கிடைக்கப்பெறாது ஜாதகர் அவதியுருவார்.. இதற்கு ஶ்ரீரங்கம் சென்று ஶ்ரீரங்கநாதரை வழிபடுவதும்... ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்து மனமுருகி குறைகள் நீங்க பிரார்த்தனை செய்வதும் புதன் கிரக பாதிப்பை குறைக்க வழி செய்யும்.. பாசிபயறு சுண்டல் (அ )பாசிப்பயறு இனிப்பு வகைகளை தானம் செய்யலாம்.

சர்ப தோஷம்

ஒருவரிள் பிறந்த ஜாதகத்தில் ,,, லக்கினம்   2, 5, 7 ,8, 12 ஆகிய இடங்களில் இராகு(அ)  கேது இருப்பிள் அதுவே சர்ப தோஷம் அல்லது நாக தோஷம் ஆகும்..இதற்கு நிறைய செலவு செய்து பரிகாரம் செய்ய தேவையில்லை. ஜாதகர் ஜாதகி  திருமணம் ஆகாதவராக இருந்தால் ஆதே அளவு சர்ப தோஷமுள்ள துணையை தேர்ந்தெடுக்கலாம்..இதில் 5,12மிட சர்ப தோஷம் குறைந்த அளவு தோஷம்..இவர்கள் சரப தோஷமில்லாத துணையை திருமணம் செய்து கொள்ளாம்..பொதுவாக சர்பதோஷம் உள்ளவர்கள் இராகுவால் தோஷமெனில் துர்கையையும், கேதுவால் தோஷமெனில் வினாயகரையும் ஆயுள் முழுவதும் ஆத்மார்த்தமாக வழிபட்டு வருவது மிகவும் நல்லது..

காதல் திருமணம்

மனிதராக பிறந்த யாவரும் காதலில் விழுவது இயல்பு..சிலருக்கு மட்டும் அந்த காதல் திருமணத்தில் நிறைவடையும். மற்றவர்களுக்கு காதல் தோல்வி அடைந்து வெறுப்பும் வேதனையும் தரும்.பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 5மிடமும்7மிடமும் தொடர்பு பெற்றால் அந்த ஜாதகர் காதலில் விழுவர்.மேலும் சுக்கிரன் புதன் சேர்க்கை கேது புதன் சேர்க்கை ஒருவரை காதலில் விழ வைக்கும்..அந்த காதல் திருமணத்தில் முடிய அவர் ஜாதகத்தில்11மிடம் வலுப்பெற்று இருக்க வேண்டும்..5,7மிடங்கள் 11மிடத்துடன் தொடர்பு பெற்றிருக்கவேண்டும்.