ஒருவர் ஜாதகத்தில் புதன் நீசம், கிரகசேர்க்கை களால் பாதிப்பு, திதி சூன்யத்தால் பாதிப்பு, அஸ்தமனம் அடைவதால் ஏற்படும் பாதிப்புகள் ஜாதகரின் புத்திசாலித்தனத்தை கேள்விக்குறி ஆக்கும்.. ஜாதகத்தில் புதனின் ஆதிபத்தியம் பெற்ற இடஙகள் வலிமை இழந்து அவற்றின் பலன்கள் கிடைக்கப்பெறாது ஜாதகர் அவதியுருவார்.. இதற்கு ஶ்ரீரங்கம் சென்று ஶ்ரீரங்கநாதரை வழிபடுவதும்... ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்து மனமுருகி குறைகள் நீங்க பிரார்த்தனை செய்வதும் புதன் கிரக பாதிப்பை குறைக்க வழி செய்யும்.. பாசிபயறு சுண்டல் (அ )பாசிப்பயறு இனிப்பு வகைகளை தானம் செய்யலாம்.
1.கல்வி 2.குடும்பம் 3.வாழ்க்கை துணை 4.தொழில் 5.குழந்தை பாக்கியம் 6.லாபம் 7.கடன் ,, வியாதி ,,வம்பு வழக்கு. 8.ஆயுள் மேற்கண்ட விசயங்களின் பலம் பலவீனம் அறியலாம் . இதில் மிகவும் முக்கியமானது திருமணபொருத்தம். ஆயிரம் வசதிகள் இருபினும் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க பொருத்தமான துணை அவசியம். பொருந்தா துணை பல சிக்கலை தரும்..அழகு பணம் படிப்பு மட்டுமே பொருந்தினால் போதாது. இருவருக்கும் ஜாதக ரீதியான பொருத்தம் வேண்டும். பெயர் பொருத்தம் ..ருது ஜாதக பொருத்தம் பார்ப்பது மிக தவறு ... வெறும் நட்சத்திர பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் தருவதும் தவறு.பொருத்தங்கள் அமைந்துவிட்டால்.. முகூர்த்த கால் நடுதல் திருமணமுகூர்த்தம் மற்றும் சாந்திமுகூர்த்தம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நல்ல முகூர்த்த நேரங்களில் மேற்கண்ட மூன்றும் நடப்பின் கணவன் மனைவி ஒற்றுமை தோஷமற்ற நற்குழந்தை பிறப்பு இனிதே நடந்தேறும்.
Comments
Post a Comment