மனிதராக பிறந்த யாவரும் காதலில் விழுவது இயல்பு..சிலருக்கு மட்டும் அந்த காதல் திருமணத்தில் நிறைவடையும். மற்றவர்களுக்கு காதல் தோல்வி அடைந்து வெறுப்பும் வேதனையும் தரும்.பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 5மிடமும்7மிடமும் தொடர்பு பெற்றால் அந்த ஜாதகர் காதலில் விழுவர்.மேலும் சுக்கிரன் புதன் சேர்க்கை கேது புதன் சேர்க்கை ஒருவரை காதலில் விழ வைக்கும்..அந்த காதல் திருமணத்தில் முடிய அவர் ஜாதகத்தில்11மிடம் வலுப்பெற்று இருக்க வேண்டும்..5,7மிடங்கள் 11மிடத்துடன் தொடர்பு பெற்றிருக்கவேண்டும்.
1.கல்வி 2.குடும்பம் 3.வாழ்க்கை துணை 4.தொழில் 5.குழந்தை பாக்கியம் 6.லாபம் 7.கடன் ,, வியாதி ,,வம்பு வழக்கு. 8.ஆயுள் மேற்கண்ட விசயங்களின் பலம் பலவீனம் அறியலாம் . இதில் மிகவும் முக்கியமானது திருமணபொருத்தம். ஆயிரம் வசதிகள் இருபினும் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க பொருத்தமான துணை அவசியம். பொருந்தா துணை பல சிக்கலை தரும்..அழகு பணம் படிப்பு மட்டுமே பொருந்தினால் போதாது. இருவருக்கும் ஜாதக ரீதியான பொருத்தம் வேண்டும். பெயர் பொருத்தம் ..ருது ஜாதக பொருத்தம் பார்ப்பது மிக தவறு ... வெறும் நட்சத்திர பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் தருவதும் தவறு.பொருத்தங்கள் அமைந்துவிட்டால்.. முகூர்த்த கால் நடுதல் திருமணமுகூர்த்தம் மற்றும் சாந்திமுகூர்த்தம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நல்ல முகூர்த்த நேரங்களில் மேற்கண்ட மூன்றும் நடப்பின் கணவன் மனைவி ஒற்றுமை தோஷமற்ற நற்குழந்தை பிறப்பு இனிதே நடந்தேறும்.
Comments
Post a Comment