ஒருவரிள் பிறந்த ஜாதகத்தில் ,,, லக்கினம் 2, 5, 7 ,8, 12 ஆகிய இடங்களில் இராகு(அ) கேது இருப்பிள் அதுவே சர்ப தோஷம் அல்லது நாக தோஷம் ஆகும்..இதற்கு நிறைய செலவு செய்து பரிகாரம் செய்ய தேவையில்லை. ஜாதகர் ஜாதகி திருமணம் ஆகாதவராக இருந்தால் ஆதே அளவு சர்ப தோஷமுள்ள துணையை தேர்ந்தெடுக்கலாம்..இதில் 5,12மிட சர்ப தோஷம் குறைந்த அளவு தோஷம்..இவர்கள் சரப தோஷமில்லாத துணையை திருமணம் செய்து கொள்ளாம்..பொதுவாக சர்பதோஷம் உள்ளவர்கள் இராகுவால் தோஷமெனில் துர்கையையும், கேதுவால் தோஷமெனில் வினாயகரையும் ஆயுள் முழுவதும் ஆத்மார்த்தமாக வழிபட்டு வருவது மிகவும் நல்லது..
1.கல்வி 2.குடும்பம் 3.வாழ்க்கை துணை 4.தொழில் 5.குழந்தை பாக்கியம் 6.லாபம் 7.கடன் ,, வியாதி ,,வம்பு வழக்கு. 8.ஆயுள் மேற்கண்ட விசயங்களின் பலம் பலவீனம் அறியலாம் . இதில் மிகவும் முக்கியமானது திருமணபொருத்தம். ஆயிரம் வசதிகள் இருபினும் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க பொருத்தமான துணை அவசியம். பொருந்தா துணை பல சிக்கலை தரும்..அழகு பணம் படிப்பு மட்டுமே பொருந்தினால் போதாது. இருவருக்கும் ஜாதக ரீதியான பொருத்தம் வேண்டும். பெயர் பொருத்தம் ..ருது ஜாதக பொருத்தம் பார்ப்பது மிக தவறு ... வெறும் நட்சத்திர பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் தருவதும் தவறு.பொருத்தங்கள் அமைந்துவிட்டால்.. முகூர்த்த கால் நடுதல் திருமணமுகூர்த்தம் மற்றும் சாந்திமுகூர்த்தம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நல்ல முகூர்த்த நேரங்களில் மேற்கண்ட மூன்றும் நடப்பின் கணவன் மனைவி ஒற்றுமை தோஷமற்ற நற்குழந்தை பிறப்பு இனிதே நடந்தேறும்.
Comments
Post a Comment