முதலில் உங்கள் மகன் அல்லது மகளிடம் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க விரும்புவதாக கூறுங்கள் அவர்களின் கருத்தை கேளுங்கள் அவர்கள் சம்மதம் தெரிவித்த பின் அவர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு நல்ல ஜோதிடரை சந்தித்து தன் பிள்ளைக்கு திருமணம் செய்ய சாதகமான காலம் எப்போது ..தோஷ நிலை எவ்வாறு உள்ளது..அதற்கு தகுந்த துணையை தேர்நதெடுக்கும் வழிகள் என்ன என கேட்டறிந்து .ஒரு நல்ல வளர்பிறை திதியை தேர்ந்தெடுத்து உங்கள் பிள்ளைகளுக்கு தகுந்த துணையை தேட தொடங்கலாம்..
1.கல்வி 2.குடும்பம் 3.வாழ்க்கை துணை 4.தொழில் 5.குழந்தை பாக்கியம் 6.லாபம் 7.கடன் ,, வியாதி ,,வம்பு வழக்கு. 8.ஆயுள் மேற்கண்ட விசயங்களின் பலம் பலவீனம் அறியலாம் . இதில் மிகவும் முக்கியமானது திருமணபொருத்தம். ஆயிரம் வசதிகள் இருபினும் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க பொருத்தமான துணை அவசியம். பொருந்தா துணை பல சிக்கலை தரும்..அழகு பணம் படிப்பு மட்டுமே பொருந்தினால் போதாது. இருவருக்கும் ஜாதக ரீதியான பொருத்தம் வேண்டும். பெயர் பொருத்தம் ..ருது ஜாதக பொருத்தம் பார்ப்பது மிக தவறு ... வெறும் நட்சத்திர பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் தருவதும் தவறு.பொருத்தங்கள் அமைந்துவிட்டால்.. முகூர்த்த கால் நடுதல் திருமணமுகூர்த்தம் மற்றும் சாந்திமுகூர்த்தம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நல்ல முகூர்த்த நேரங்களில் மேற்கண்ட மூன்றும் நடப்பின் கணவன் மனைவி ஒற்றுமை தோஷமற்ற நற்குழந்தை பிறப்பு இனிதே நடந்தேறும்.
Comments
Post a Comment