1 உடல் சக்தி குறைவு
2 சுற்று சூழல்
3குறிக்கோள் இல்லாமை
இவை மனச்சோர்வுக்கு முக்கிய காரணிகள். பெரும்பாலான குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு
சரிவிகித உணவும் ஊட்டச்சத்தும் கிடைப்பதில்லை.. கேப்பை உளுந்து பயறுவகைகள் நெய் வெல்லம் இவற்றை கொண்டு வீட்டிலேயே வித விதமான திண்பண்டங்கள செய்து தருவதில்லை.. மாறாக சாக்லெட் பாலில் கலந்து குடிக்கும் ஊட்டசத்துபானங்கள் (இது தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் வேறு கிரகத்திலிருத்தா கிடைக்கிறது) எண்ணையில் பொரித்த விதவிதமான பண்டங்கள் சிக்கன்65 என்று உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் எல்லாவற்றையும் குழந்தை பருவத்திலேயே சாப்பிட பழக்கிவிட்டு பின்நாட்களில் என் பிள்ளை இதைத்தான் சாப்பிடுகிறாள்(ன்) வேறெதுவும் சாப்பிடுவதில்லை என்று மற்றவர்களிடம் பெருமையாக? சொல்லிக்
கொள்கிறோம்.
காலத்திற்கேற்றவாறு நடை உடை பாவனையை மாற்றிக்கொண்டோம்..
உணவு பழக்கத்தையுமா மாற்றிக்கொள்ள வேண்டும் நாம் ஆரோக்யமாக வாழ்வதற்கான ஆதாரமே நாம் உண்ணும் உணவுதானே! ஒரு செம்பு பானை அல்லது வாட்டர்ஃபில்டர் வாங்கி வைத்துக்கொண்டு அதிலிருந்து கிடைக்கும் நீரை பருகுவதே நீரின் சத்துக்களை நமக்கு கிடைக்கச் செய்யும. மறாக மினரல் வாட்டர் குடிப்பதால் நன்மை ஏதுமில்லை. அந்தகாலத்தில் இருந்து இப்போது வரை நம்முடன் வாழும் ஆடு மாடு நாய் பூனை போன்ற விலங்குகள் தங்கள் உணவை மாற்றிக்கொள்ளவில்லை ஒரு வேளை மனிதனால் மாற்றப்பட்டால்..
அவற்றின் தன்மை கெட்டுவிடுகிறது.
மனிதனின் உணவுப்பழக்கமும் ஒரு வரையறைக்குள் இல்லாவிட்டால் மனநலம் உடல்நலம் கெடும்.
அடுத்துசுற்றுச்சூழல்
முதலாவதாக பிள்ளைகளுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்கள் பெற்றோர்கள்..குழந்தை பருவத்திலிருந்து பெரியவர்களாகும்வரை பெற்றோரின் செயல்பாடுகளை கவனித்து கற்றுக்கொள்கின்றனர். எனவே குழந்தை பிறக்கும் முன் நாம் எப்படி இருந்தாலும் குழந்தை பிறந்தபின் நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொண்டும்.தீய பழக்கங்களை அறவே நீக்கியும் வாழ பழகிக்கொள்ளவேண்டும் .நல்லபுத்தகங்கள் படிக்கவும் ..சைக்கிள் ஓட்டுதல் நீச்சல்அடித்தல் கட்டாயமாக கற்றுத்தர வேண்டும். அதற்க்கு மேல் கற்றுக்கொள்ளும் விசயங்கள் அவரவர் விருப்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்தது.
பிள்ளை படிக்கும் பாடங்களை நாமும் அவ்வப்போது ஆர்வமுடன் புரட்டிபார்த்து அதில் உள்ள விசயங்கள் பற்றி கலந்துரையாடவேண்டும். பிள்ளை முன் பெற்றோர் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும் .தனிமையில் இருக்கும் நேரங்களில் ஒருவருகொருவர் மனம் விட்டுபேசி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.தேவையற்ற ஆடம்பர அல்லது வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..முக்கியமாக எல்லா குழந்தையும் படிப்பில் கெட்டியாக இருப்பதில்லை..நம் குழந்தை நன்றாக கற்றுக்கொள்ள நம்மால் எவ்வளவு உதவ முடியுமோ உதவுவோம்..அவர்களால் முடிந்த மதிப்பெண்களை எடுக்கட்டும் எல்லா நிலையிலும் ஊக்கப்படுத்துவதை கடமையாக கொள்வோம்.
அடுத்தது குறிக்கோள் இல்லாமை
நாம் வாழும் ஒவ்வொரு நாட்களையும் அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள ஏதோ ஒன்றை சாதிக்க நினைப்பதே குறிக்கோள் ஆகும்.(பிடித்த
திண்பண்டம் பிடித்தஉடை பிடித்ததபொம்மைகள் பிடித்த இடத்துக்கு செல்லுதல் போன்ற சிறு சிறு குறிக்கோள்களை அவ்வப்போது நம்மிடம் நயந்தோ அடம் பிடித்தோ அடைந்துவிடுகின்றனர்) அவர்களின் திறமை விருப்பம் ஆகியவற்றை கவனித்து அதை குறிக்கோளாக்கி அடைய முயற்ச்சி செய் ஊக்கப்படுத்தலாம்..
ஆனால் நமக்கு பிடித்த ஒன்றை குறிக்கோளாக மாற்றி அவர்களிடம் திணிக்ககூடாது..நம் மீது வெறுப்பு வரலாம்..பிள்ளைகள் வளர வளர அவர்களை சுயமாக சிந்தித்து முடிவெடுக்க பழக்க வேண்டும்.உடல் மற்றும் மன ஆரோக்கியம் நிறைந்த பிள்ளைகள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்கும் எனவே உங்கள் பிள்ளைகள் சிறந்தவர்களாக இருக்க இஷ்டப்பட்டு கஷ்டப்படுங்கள். நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டி.
Comments
Post a Comment